Total Pageviews

Sunday, February 7, 2016

கந்தர் அலங்காரம் 16 , 72









தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. ... 16 

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ... 72


உய்யும் வழி யாது என்று ஒவ்வொரு ஞானிகளும் அவர்களின் அனுபவத்தினை சுருக்கமாக சொல்லியிருப்பார்கள்

அருணகிரிநாதரும் அவ்வாறு உலக மாந்தர்கள் அனைவரும் எளிய அடிப்படையான ஒரு வழியை இங்கு காட்டியுள்ளார்

பொதுவாக ஆன்மீக உலகில் இப்படி ஒவ்வொரு ஞானிகளும் ஒரு உபாயத்தை காட்டியிருப்பார்கள்

அவர்களின் சீடர்கள் உடனே இதுமட்டுமே ஒரே வழி என பெருமை பேசிக்கொண்டு மற்றெதையும் கண்ணெடுத்தும் பாராமலும் காது கொடுத்து கேளாமலும் இருந்து விடுவது ஒரு பெரும் தடையாக இருந்து விடுகிறது

ஆப்ரகாம் என்றொரு ஆரிய தேசத்தவருக்கு இறைவனின் தரிசனம் உண்டாயிற்று . அவரது வாரீசுகலான யூதர்கள் மற்றும் அரபியருக்கு நல்வழி அவ்வப்போது தனது வாயாக செயல்படும் இறைத்தூதர்கள் மூலமாக காட்டுவேன் என்ற வாக்கும் அவருக்கு கிடைத்தது

அவ்வாறே யூதர்களுக்கு மோசே மூலமாக தவ்ராத் என்ற வேதம் அருளப்பட்டது . மோசேயும் ஒளி சரீரம் பெற்றவாராக பரலோகம் எடுத்துக்கொள்ளப்பட்டார்

அவருக்கு பின்பு காலப்போக்கில் அதை கடைபிடிக்கும் மனிதர்கள் அதில் பல கலப்படங்கள் செய்து அதற்கு பல தவறான அர்த்தங்களை கற்பித்துக்கொண்டார்கள் , அப்போதெல்லாம் இறைவன் தனது வாக்கின்படியாக அவர்களின் இனத்திளிலிருந்தே புதிய இறைத்தூதர் ஒருவரை அனுப்புவார் .பலமுறை அனுப்பியும் வைத்தார் .  அப்போதெல்லாம் இறைவனின் பெயரை சொல்லிக்கிக்கொண்டும் இறைவனுக்கு தொண்டு செய்வதாக நினைத்துக்கொண்டும் அவரை யூதர்கள் கொடுமைப்படுத்திய வரலாறு பைபிள் முழுவதும் உள்ளது கடைசியாக அந்த இனத்தில் பரமாத்மாவான நாராயணனே இயேசுவாகவும் அவதரித்தார் . எத்தனையோ அற்புதங்கள் அடையாளங்கள் செய்து யூத வேதத்தில் சொல்லப்பட்ட மேசியா என்ற அவதாரம் தானே என நிரூபித்தார் .

மேசியா வரப்போகிறார் வரப்போகிறார் என்று சொல்லிக்கொண்டே யூத மத குருமார்களால் அந்த மேசியா இயேசுதான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ; காரணம் அந்த மேசியா வருவார்தான் ஆனால் அவர் மத குருமார்களான தங்களில் ஒருவராக இருக்கவேண்டுமேயொழிய வேறொருவராக இருக்கக்கூடாது என கடவுளுக்கே கட்டளையிட்டுக்கொண்டிருந்தார்கள் . இறைவனிடமிருந்து ஒரு ஞானி மூலமாக வந்த விசயம் மகத்துவமானதுதான் ; ஆனால் அதை மாற்ற இறைவனுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை இந்த சீடர்கள் மறந்து விட்டு இறைவனுக்கு தாங்களே குத்தகைதாரன் என்பதுபோல நடந்து கொள்கிறார்கள் .

ஆப்ரகாமின் வாரீசுகலான அராபியர்களில் ஒரே ஒரு இறைத்தூதர் முகமது நபி மட்டுமே வந்தார் , அவர்களுக்கும் அந்த மதப்பெருமை பிடித்து அந்த வசணம் இப்படி உள்ளது அப்படி உள்ளது ; ஆகவே இனிமேல் இறைத்தூதர் ஒருவரை இறைவன் அணுப்பக்கூடாது என இறைவனுக்கே கட்டளையிட்டுக்கொண்டுள்ளுனர் ; அப்படி யாராவது வந்தால் அவரை அல்லா என கத்திக்கொண்டு கொல்லாமலும் விட மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டும் உள்ளனர் .

குரானின் வசனங்களை மாற்றுவதற்கு மனிதர்களுக்குத்தான் அதிகாரம் இல்லை . ஆனால் அதை இறக்கிய இறைவனுக்கும் அதிகாரம் இல்லை என்பதாக இசுலாமியர்கள் புரிந்துகொள்கிறார்கள் . இறக்கப்பட்ட வசனத்திற்கு இறைவனும் அடிமை என்பதுபோல  அவர்கள் செயல்பாடு உள்ளது 

இந்த மார்க்கப்பெருமை இருக்கிறதே அது அசுரர்களின் சரக்கு . பைபிளிலும் குரானிலும் கூட மாகோகு என்ற அசுர ஆவி மனிதர்களை வழி கெடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது . கோக்கு மாக்கு என்று தமிழில் சொல்வார்களே எதிலும் குழப்பத்தை உண்டாக்கி எந்த வளர்ச்சியும் நடக்காதபடி தடுக்கும் ஆவிகளே மாக்கு கோக்கு மாகோகு ஆவிகள் . இவைகளின் வழி பெருமையைத்தூண்டுவது .வேறு எதையும் காது கொடுத்து கேட்க விடாது கண் கொண்டு பார்க்க விடாது .இயேசுவின் வருத்தத்தை பாருங்கள் :

மத்தேயு 13:15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால்

 கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும்

இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் 

மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் .

அவர்கள் கேட்கிறார்கள் ஆனால் மந்தமாக கொஞ்சம் கேட்டவுடன் ; கொஞ்சம் தெரிந்தவுடன் ; கொஞ்சம் ஆன்மீகத்தில் வந்தவுடன் அவர்களை பெருமை பிடித்துக்கொள்கிறது . பல பிறவிகள் கணக்குவழக்கில்லாமல் பல பாவங்கள் தவறுகள் செய்துவிட்டு கொஞ்சம் ஆன்மீகத்தில் நுழைந்தவுடன் தங்களை பரிசுத்தர்களாக அல்லது நிறைய தேரிவிட்டவர்களாக கருதிக்கொள்கிறார்கள் ; எங்க குரு அப்படி இப்படி ; இவர்தான் ஒரே வழி என்று பிரசார பீரங்கிகளாக ஒலிபரப்பு செய்துகொண்டிருப்பார்கள் . அந்த குரு சென்று நிறைய காலம் ஆகிவிட்டது ; இப்போது புதிய மாயைகளை அசுரர்கள் கொண்டுவந்து விட்டார்கள் .

சூரனை முருகன் கொல்ல கொல்ல அவன் புதிய புதிய வடிவில் வந்து கொண்டே இருக்கிறான் . அல்லாமலும் கிரவ்ஜம் என்ற மாய மலையை உருவாக்கி அதில் அவன் மறைந்து பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கிறான் . அங்கிருந்து அவன் புதிய புதிய மாயைகளை மனித குலத்தில் கட்டவிழ்த்துக்கொண்டே இருக்கிறான் 

கலியுகத்தின் முடிவு வரை அவன் இறைமனிதர்கள் ; மார்க்கங்கள் ; பக்தர்களிடம் இறைவனுக்காக அடுத்த மார்க்கத்தை அழித்து விடு உன்மார்க்கம் தவிர சிறந்த மார்க்கம் எதுவுமில்லை ; ஆகவே உன்னை சீர்திருத்துவது ஆத்மாவை பரிசுத்தப்படுத்துவது என்பதெல்லாம் அவசியமில்லை . பெருமைப்படு பெருமைப்படு என்று உபதேசம் செய்து கொண்டே இருப்பான் .


இந்த மாய்மாலங்களிளிருந்து நமக்கு விடுதலை வேண்டுமா அது பரத்திலிருந்து வரும் புதிய புதிய வழிகாட்டுதல்களான முருகனின் வேலால் மட்டுமே முடியும் . முருகன் என்பவன் ஆவிமண்டல சற்குரு . அவரே உலகில் பிரபலமாகும் எந்த ஒரு புதிய மார்க்கம் ; மற்றும் அதன் குருவின் பின்னணியில் இருப்பவர் . இறைவனது கிருபையில்லாமல் எந்த மார்க்கமும் வளராது . மனித குருமார்கள் அனைவரும் முருகனின் வெளிப்பாடுகளே . ஆகவேதான் அவரை சற்குரு என்றார்கள் . சேவல் கொடியோன் என்றார்கள் . சேவல் கூவி உலகத்தை விழிப்படைய செய்கிறது . அப்படி மனித குருமார்கள் அவ்வப்போது புதிய சூழ்நிலைக்கு ஏற்ப புதிய உத்திகளை கொண்டு வந்து உலகை விழிப்படைய செய்கிறார்கள் . ஆனால் அது இறைவனை மையமாக வைத்திருக்கவேண்டும் . அப்படி இருந்தால் அந்த குரு முருகனின் குருகுலத்தில் வந்தவரே .

ஆகவேதான் முருகன் சேந்தன் . தண்ணீரை ஏற்றம்  சேந்தி சேந்தி உயரத்தில் கொண்டுபோய் கொட்டும் . சேந்தன் நம்மை ஒவ்வொரு மாயையிலிருந்தும் சேந்தி சேந்தி உயர்த்தி விடுவார் .

அப்படி உயர்த்தி விடும்போது நாம் ஏற்கனவே செய்த பாவத்திலிருந்தும் விடுதலை வேண்டும் . கணக்கு சமமாகவேண்டும் . திருந்தினால்மட்டும் போதாது ; பிராயச்சித்தமும் செய்தாக வேண்டும் அல்லது பாவமண்ணிப்பும் வேண்டும் . அதனால்தான் அவன் கந்தன் .

குரான் கூட வட்டியை தடை செய்திருக்கிறது . ஆனால் கந்துவட்டியை அனுமதிக்கிறது . வட்டியில் அசல் குறையாது . வட்டி மட்டுமே அடைக்க முடியும் ; அசலை முழுமையாக கொடுத்து தீர்க்கவேண்டும் . அது அவ்வளவு எளிதல்ல . ஆனால் கந்து வட்டியில் அசலில் ஒரு பகுதியையும் வட்டியில் ஒரு பகுதியையும் அடைக்கும்படியாக ஒரு முறை இருக்கும் . அதனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அந்த கடன் நிச்சயம் அடையும் . ஆகவே கடனை அடைக்க ஒரு கருணை உள்ளதே கந்து வட்டி . அப்படி நமது ஆத்மா பரிசுத்தம் ஆகும் வழியை முருகன் பார்த்துக்கொள்வதால் அவன் கந்தன் .

கடைசியாக இவன் வள்ளிக்குரத்திகளை தேடி வருகிறவன் . மனிதனாக பிறந்த ஆத்மா எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவன் ஒரு நாள் முழுமையடைவான் என்பது இறைவனால் உண்டான வாக்கு . ஆகவே அவனை திருத்தும்படியாக முருகன் தேடி வந்து வம்பு செய்து நல்வழிப்படும் மார்க்கத்தில் சேந்தி விடுவான் கந்து கொடுத்து தப்புவிப்பான் . அவர்களை தேவானையாக மாற்றுவான் .



அதற்கு நமக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் அல்லது கேட்க நேரிடும் ஆன்மீக விசயங்களை அது எந்த மார்க்கத்திலிருந்து வந்தாலும் காது கொடுத்து கேட்டால்மட்டும் போதும் ; அதன் உண்மைகளை இறைவன் ஒருநாள் நமக்கு விளங்க வைத்து நம்மை முழுமையடைய செய்வார்  நாம் வெகுளித்தனத்தை ; இது மட்டும்தான் சரி என்பதை விட்டுவிட வேண்டும் . இறைவன் நம் மனக்கண்ணை திறந்து வைப்பாராக . 




நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

No comments:

Post a Comment